حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي وَحَوَّلَ رِدَاءَهُ.
அப்பாத் பின் தமீம் அவர்களின் மாமா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காகப் (இஸ்திஸ்கா தொழுகையை நிறைவேற்றுவதற்காகப்) புறப்பட்டார்கள்; மேலும் தமது மேலங்கியை (வலது தோளிலிருந்ததை இடது தோளுக்கும், இடது தோளிலிருந்ததை வலது தோளுக்கும் மாற்றி) அணிந்து கொண்டார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا وَهْبٌ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ.
அப்துல்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள் (இஸ்திஸ்காத் தொழுகை தொழுதார்கள்). அப்போது தமது மேலாடையைத் திருப்பிப் போட்டுக் கொண்டார்கள்.
அப்பாத் பின் தமீம் அவர்கள் தமது மாமா (அப்துல்லாஹ் பின் ஸைத் ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டி (இஸ்திஸ்கா) பிரார்த்திக்க முஸல்லாவிற்குச் சென்றார்கள்; (அங்கு) கிப்லாவை முன்னோக்கி இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்; மேலும் தமது மேலாடையைப் புரட்டிப் போட்டார்கள்."
(அறிவிப்பாளர்) அபூபக்ர் அவர்கள் கூறினார்கள்: "அவர்கள் (தமது மேலாடையின்) வலது பக்கத்தை இடது பக்கத்தின் மீது போட்டார்கள்."
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ .
அப்பாத் பின் தமீம் (ரழி) அவர்கள் தம் பெரிய தந்தை (அப்துல்லாஹ் பின் ஸைத் ரழி) வாயிலாக அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று, மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். (அப்போது) கிப்லாவை முன்னோக்கி, தம் மேலாடையைப் புரட்டிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.