இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்கள் (பின்வருமாறு) உளூச் செய்து, தமது முகத்தைக் கழுவினார்கள்: அவர்கள் ஒரு கையளவு தண்ணீர் அள்ளி, அதனால் வாய்க் கொப்பளித்து, மூக்கினுள் தண்ணீரைச் செலுத்தி (சிந்தி) சுத்தம் செய்தார்கள். பிறகு, ஒரு கையளவு (தண்ணீர்) எடுத்து, அதைத் தமது இரு கைகளையும் இணைத்து இவ்வாறு (சைகை செய்து காட்டி)ச் செய்து, தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு, ஒரு கையளவு தண்ணீர் எடுத்து, தமது வலது கையைக் கழுவினார்கள். பிறகு, ஒரு கையளவு தண்ணீர் எடுத்து, தமது இடது கையைக் கழுவினார்கள். பின்னர் தமது தலையை மஸ்ஹு செய்தார்கள். பிறகு, ஒரு கையளவு தண்ணீர் எடுத்து, அதைத் தமது வலது கால் மீது தெளித்து, அதை நன்கு கழுவினார்கள். பிறகு, மற்றொரு கையளவு (தண்ணீர்) எடுத்து, தமது இடது காலை நன்கு கழுவினார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு உளூச் செய்வதை நான் கண்டேன்" எனக் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வுளூ செய்வதைப் பார்த்தேன். அவர்கள் தமது கைகளைக் (மணிக்கட்டு வரை) கழுவினார்கள்; பின்னர் ஒரேயொரு கைப்பிடி தண்ணீரால் வாய் கொப்பளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள்; தமது முகத்தைக் கழுவினார்கள்; (முழங்கைகள் வரை) ஒவ்வொரு கையையும் ஒருமுறை கழுவினார்கள்; மேலும் தமது தலையையும் காதுகளையும் ஒருமுறை மஸ்ஹ் செய்தார்கள்."
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் கூறினார்: "இப்னு அஜ்லானிடமிருந்து கேட்ட ஒருவர், அவர் அது குறித்து 'மேலும் அவர்கள் தமது பாதங்களைக் கழுவினார்கள்' என்று கூறியதாக எனக்குத் தெரிவித்தார்."