அபூ உமாமா (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: அம்ர் இப்னு அபஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக எனக்கு அறிவித்தார்கள்: “ஓர் அடியானுக்கு அவனது இரட்சகன் (அல்லாஹ்) மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதியாகும். ஆகவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூருபவர்களில் (தொழுபவர்கள், துஆ செய்பவர்கள், திக்ர் செய்பவர்கள்) ஒருவராக இருக்க உங்களால் முடியுமானால், அவ்வாறே இருங்கள்.”