சஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒருவர் முஅத்தின் கூறுவதைக் கேட்கும் போது: “மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நானும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் திருப்தி கொண்டேன்” என்று கூறினால், அவர் மன்னிக்கப்படுவார்.
ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் முஅத்தின் கூறுவதை கேட்கும்போது, (வ அன அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழித்து பில்லாஹி ரப்பன், வ பில் இஸ்லாமி தீனன், வ பி முஹம்மதின் ரசூலன்) 'நானும் சாட்சி கூறுகிறேன்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை; மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதரும் ஆவார். அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும் நான் பொருந்திக்கொண்டேன்' என்று கூறுகிறாரோ, அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடுவான்."
சஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் முஅத்தின் (பாங்கு சொல்பவர்) கூறுவதைக் கேட்டுவிட்டு, 'வ அன அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழீத்து பில்லாஹி ரப்பன் வ பில்-இஸ்லாமி தீனன் வ பி முஹம்மதின் நபிய்யன்' (நானும் சாட்சி கூறுகிறேன்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை. மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை நபியாகவும் கொண்டு நான் திருப்தியடைந்தேன்) என்று கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்."
وعن سعد بن أبي وقاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: من قال حين يسمع المؤذن: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبده ورسوله، رضيت بالله ربًا وبالإسلام دينًا، غفر له ذنبه ((رواه الترمذي وقال حديث حسن)).
சஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் பாங்கு சொல்லப்பட்டப் பிறகு, 'அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழீத்து பில்லாஹி ரப்பன், வ பிமுஹம்மதின் ரசூலன், வ பில் இஸ்லாமி தீனன்' அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் பொருந்திக் கொண்டேன் என்று கூறுவாரோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்."