அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது தொடையில் தட்டிவிட்டு கூறினார்கள்: தொழுகையை அதன் (குறிப்பிட்ட) நேரத்தை விட்டும் தாமதப்படுத்தும் மக்களுக்கு மத்தியில் நீங்கள் உயிர் வாழ்ந்தால் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?
அவர் (அபூ தர் (ரழி) அவர்கள்) கேட்டார்கள்: (இந்த சூழ்நிலையில்) தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?
அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் தொழுது கொள்ளுங்கள், பின்னர் உங்கள் தேவைகளை (பூர்த்தி செய்ய) செல்லுங்கள், இகாமத் சொல்லப்பட்டு, நீங்கள் பள்ளிவாசலில் இருந்தால், பின்னர் (ஜமாஅத்துடன்) தொழுகையை நிறைவேற்றுங்கள்.