அலீ பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃ செய்யும்போது, "அல்லாஹும்ம லக்க ரக்கஃத்து வ லக்க அஸ்லம்து வ பிக்க ஆமன்து, கஷஅ லக்க ஸம்ஈ வ பஸரீ வ இழாமீ வ முக்கீ வ அஸபீ" (பொருள்: அல்லாஹ்வே! உனக்கே நான் ருகூஃ செய்தேன்; உனக்கே நான் அடிபணிந்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன். என் செவியும், என் பார்வையும், என் எலும்புகளும், என் மூளையும், என் நரம்புகளும் உனக்கு அஞ்சிப் பணிந்துவிட்டன) என்று கூறுவார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் ருகூஃ செய்யும்போது கூறுவார்கள்: "அல்லாஹும்ம லக ரகஃது வ பிக ஆமன்து வ லக அஸ்லம்து வ அலைக தவக்கல்து, அன்த ரப்பீ, கஷஅ ஸம்ஈ வ பஸரீ வ தமீ வ லஹ்மீ வ அழ்மீ வ அஸபீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் (யா அல்லாஹ், உனக்காகவே நான் ருகூஃ செய்தேன், உன்னையே நான் ஈமான் கொண்டேன், உனக்கே நான் அடிபணிந்தேன், உன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன். நீயே என் இறைவன். என் செவி, என் பார்வை, என் இரத்தம், என் சதை, என் எலும்புகள், என் நரம்புகள் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பணிந்துவிட்டன.)"