حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ، قَالَ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الأَنْصَارِ وَقُرَيْشٍ فِي دَارِي الَّتِي بِالْمَدِينَةِ. وَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள என்னுடைய வீட்டில் அன்சாரிகளுக்கும் குறைஷிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்; மேலும் அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தினருக்கு எதிராக ஒரு மாத காலம் ஒவ்வொரு கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்திலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அவர் (இப்னு உமர் (ரழி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ரு தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்திய பின்பு, “யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! எல்லாப் புகழும் உனக்கே உரியது” என்றும், மேலும் இறுதி (ரக்அத்)தில், “யா அல்லாஹ்! இன்னாரையும் இன்னாரையும் சபிப்பாயாக!” என்றும் கூறுவதை கேட்டார்கள். பிறகு அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி) அருளினான்:-- ‘(முஹம்மதே (ஸல்)!) இந்த(க் காரியத்தின்) முடிவு உமக்குரியதன்று, (மாறாக அல்லாஹ்வுக்கே உரியது); அவன் அவர்கள் மீது கருணை கொண்டு அவர்களை மன்னிப்பதா அல்லது அவர்களைத் தண்டிப்பதா (என்பது அவனுடையதே); ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.’ (3:128)