حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ ـ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் ஏழு எலும்புகள் மீது ஸஜ்தா செய்யுமாறும் – அதாவது நெற்றி (அதனுடன் மூக்கின் நுனியையும் சேர்த்து) – (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தமது மூக்கைச் சுட்டிக் காட்டினார்கள் – இரு கைகள், இரு முழங்கால்கள், மற்றும் இரு பாதங்களின் கால் விரல் நுனிகள் (ஆகியவற்றின் மீது) – மேலும் (தொழுகையில்) ஆடைகளையோ முடியையோ ஒதுக்கிக் கட்டாமலும் இருக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன்."
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் ஏழு எலும்புகள் மீது ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்: நெற்றி - (அப்போது) அவர்கள் தமது கையால் தமது மூக்கைச் சுட்டிக்காட்டினார்கள் -, இரு கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்களின் நுனிகள். மேலும், ஆடைகளையோ தலைமுடியையோ மடக்கிக்கொள்ளக் கூடாது.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “நான் ஏழு (எலும்புகள்) மீது ஸஜ்தா செய்யவும், தலைமுடியையும் ஆடையையும் மடக்கக்கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன். (அவை): நெற்றி, மூக்கு, இரு கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்கள்.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் ஏழு உறுப்புகளின் மீது ஸஜ்தாச் செய்யுமாறும், எனது முடியையோ ஆடையையோ சுருட்டக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்: நெற்றி, மூக்கு, கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்கள்."