ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது சஜ்தாவில் கூறுவார்கள்: "அல்லாஹும்ம லக ஸஜத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து, வ அன்த ரப்பீ! ஸஜத வஜ்ஹீ லில்லதீ ஃகலகஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு, தபாரகல்லாஹு அஹ்ஸனுல் ஃகாலிகீன்." (அல்லாஹ்வே! உனக்கே நான் சஜ்தா செய்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன்; உனக்கே நான் (முழுமையாக) அடிபணிந்தேன்; நீயே என் இறைவன். என் முகம், அதைப் படைத்து, அதை வடிவமைத்து, அதன் செவியையும் பார்வையையும் (அதற்கான துவாரங்களைப்) பிளந்து அமைத்தவனுக்கு சஜ்தா செய்தது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.)
(யா அல்லாஹ்! உனக்கே நான் ஸஜ்தாச் செய்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன்; உனக்கே நான் சரணடைந்தேன். நீயே என் இறைவன்; என் முகம், (எனக்கு) செவியையும் பார்வையையும் உண்டாக்கியவனுக்கே ஸஜ்தாச் செய்தது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்).