ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்குபவனாக இருந்தேன். அவர்களுக்கு வுளூ (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரையும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் நான் கொண்டு வருவேன். (அப்போது) அவர்கள் என்னிடம், "கேளும்" என்றார்கள். நான், "சொர்க்கத்தில் தங்களுடைய தோழமையை வேண்டுகிறேன்" என்றேன். அவர்கள், "வேறு ஏதேனும் (வேண்டுமா)?" என்று கேட்டார்கள். நான், "(எனக்குத் தேவையானது) அதுவேதான்" என்றேன். அவர்கள், "அப்படியாயின், அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வதன் மூலம் (உமக்காக) எனக்கு உதவுவீராக" என்று கூறினார்கள்.
ரபிஆ பின் கஅப் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருப்பேன். நான் அவர்களின் உளூவிற்காகவும், அவர்களின் தேவைக்காகவும் (தண்ணீர்) கொண்டு வருவேன். அவர்கள் (ஒருநாள் என்னிடம்), "என்னிடம் கேள் (உனக்கு என்ன வேண்டும்?)" என்று கேட்டார்கள். நான், "சுவர்க்கத்தில் தங்களின் தோழமை (வேண்டும்)" என்று கூறினேன். அவர்கள், "அது அல்லாமல் வேறு ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்கள். நான், "அது மட்டும்தான்" என்று கூறினேன். அவர்கள், "அப்படியானால், நீ அதிகமாக ஸஜ்தா செய்வதன் மூலம் (சுவனத்தில் என் தோழமையை அடைய) எனக்கு உதவி செய்வாயாக" என்று கூறினார்கள்.