أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ .
சாலிம் அவர்கள் தமது தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும், ருகூஃ செய்யும் போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போதும், தமது தோள்களுக்கு இணையாக வரும் வரை தமது கைகளை உயர்த்துவதைக் கண்டேன்."
ஸாலிம் அவர்கள் தனது தந்தை (இப்னு உமர்) (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் தமது கைகளை உயர்த்துவதை நான் கண்டேன்; அவர்கள் ருகூஃ செய்யும்போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்திய பிறகும் அவ்வாறே செய்வார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அவர்கள் ஒருமுறை, "அவர்கள் தமது தலையை உயர்த்தியபோது:" என்றும், பின்னொரு சமயம், "ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது" என்றும் கூறுவார்கள். அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் (தமது கைகளை) உயர்த்த மாட்டார்கள்.
ஸாலிம் அவர்கள், தம் தந்தை (இப்னு உமர்) (ரழி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக அறிவித்தார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது இரு கைகளையும் தமது தோள்புஜங்கள் அளவிற்கு உயர்த்துவதையும், (மீண்டும்) அவர்கள் ருகூஃ செய்யும்போது (அவ்வாறே கைகளை உயர்த்துவதையும்), மேலும் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது (அவ்வாறே கைகளை உயர்த்துவதையும்) கண்டேன்.”
இப்னு அபீ உமர் அவர்கள் தமது அறிவிப்பில் கூடுதலாகக் கூறினார்கள்: “மேலும், அவர்கள் (ஸல்) இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் கைகளை உயர்த்த மாட்டார்கள்.”