வாயில் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கியபோதும், ருகூஃ செய்யும்போதும், ருகூவிலிருந்து தங்கள் தலையை உயர்த்தும்போதும் தங்கள் கைகளை உயர்த்துவதை நான் பார்த்தேன். அவர்கள் (அத்தஹிய்யாத்திற்காக) அமரும்போது, தங்கள் இடது காலை (தரையில்) சாய்வாக வைத்து, வலது காலை நட்டு வைத்து, தங்கள் இடது கையை இடது தொடையின் மீதும், வலது கையை வலது தொடையின் மீதும் வைத்து, தங்கள் நடுவிரலையும் கட்டைவிரலையும் வட்டமாக்கி, (ஆட்காட்டி விரலால்) சுட்டிக்காட்டினார்கள்.”