மாலிக் பின் நுமைர் அல்-குஸாஈ அவர்களின் தந்தை (ரழி) கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது, தமது வலது கையை தமது வலது தொடையின் மீது வைத்து, தமது விரலால் (சுட்டு விரலால் தஷஹ்ஹுத் அமர்வில்) சுட்டிக்காட்டுவதைக் கண்டேன்."
நுமைர் அல்-குஸாஈ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தமது வலது முன்கையைத் தமது வலது தொடையின் மீது வைத்து, தமது ஆட்காட்டி விரலை உயர்த்தி, அதைச் சற்று வளைத்திருந்ததை (தஷஹ்ஹுத் அமர்வில்) நான் பார்த்தேன்.