மிஹ்ஜன் இப்னுல் அத்ரஃ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தனது தொழுகையை முடித்து, தஷஹ்ஹுதில் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்: யா அல்லாஹ்! நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! நீயே ஒருவன்; தேவைகளற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவுமில்லை; அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை; மேலும், அவனுக்கு நிகராக யாரும் இல்லை. நீ என் பாவங்களை மன்னிக்க வேண்டும். நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்பவன், கருணையாளன்.
அப்போது நபியவர்கள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார் (இதை மூன்று முறை கூறினார்கள்.)