حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،} قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "நபி (ஸல்) அவர்களின் தொழுகை முடிவடைவதை, தக்பீர் (சப்தத்தின்) மூலம் நான் அறிந்துகொள்வேன்."
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي بِذَا أَبُو مَعْبَدٍ، - ثُمَّ أَنْكَرَهُ بَعْدُ - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا نَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை முடிவடைவதை, ‘தக்பீர்’ மூலமே நாங்கள் அறிந்துகொள்வோம். (இந்த அறிவிப்பை அபூ மஅபத் பின்னர் மறுத்தார் என அம்ர் இப்னு தீனார் குறிப்பிட்டார்.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தொழுகை முடிவடைவதை தக்பீர் (கூறும் சப்தத்தின்) மூலம் நாங்கள் அறிந்துகொள்வோம்."
அம்ர் (பின் தீனார்) கூறினார்கள்: "நான் இதைப்பற்றி அபூ மஅபத் அவர்களிடம் குறிப்பிட்டேன். ஆனால் அவர்கள் அதை மறுத்து, 'நான் இதை உமக்கு அறிவிக்கவில்லை' என்று கூறினார்கள்."
அம்ர் கூறினார்கள்: "அவர்கள் இதற்கு முன்பாக இதை எனக்கு அறிவித்திருந்தார்கள்."