அம்ராவின் சகோதரி அறிவிக்கின்றார்: "நான் 'காஃப், வல் குர்ஆனில் மஜீத்' என்ற சூராவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெள்ளிக்கிழமையன்று கேட்டுப் பெற்றேன் (அதாவது, அவர்கள் ஓத நான் நேரடியாகக் கேட்டு மனனம் செய்தேன்). அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிம்பரில் அதை ஓதுபவர்களாக இருந்தார்கள்."