நாங்கள் உமர் (ரழி) அவர்களுடன் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருந்தபோது, பிறையைத் தேடினோம். நான் கூர்மையான கண்பார்வை கொண்டவனாக இருந்தேன்; எனவே நான் அதைப் பார்த்தேன். என்னைத் தவிர வேறு யாரும் அதைப் பார்த்ததாகக் கூறவில்லை. நான் உமர் (ரழி) அவர்களிடம், "நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?" என்று கேட்கலானேன். ஆனால், அவர்களுக்கு அது தென்படவில்லை. உமர் (ரழி), "நான் எனது படுக்கையில் சாய்ந்துகொண்டிருக்கும் நிலையில் (விரைவில்) அதனைப் பார்ப்பேன்" என்று கூறினார்கள்.
பிறகு பத்ருவாசிகளைப் பற்றி எங்களுக்கு அறிவிக்கலானார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர் நடப்பதற்கு) முந்தைய நாள் பத்ருவாசிகள் கொல்லப்படும் இடங்களை எங்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), நாளை இது இன்னாரின் மரண இடமாகும்' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்."
உமர் (ரழி) கூறினார்கள்: "அவரை சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரையறுத்துக் காட்டிய இடங்களை விட்டும் அவர்கள் தவறவில்லை." பிறகு அவர்கள் ஒரு கிணற்றில் ஒருவர் மீது ஒருவராகப் போடப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, அவர்கள் அருகில் நின்று, "ஏ இன்னாரின் மகன் இன்னாரே! ஏ இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டீர்களா? ஏனெனில், அல்லாஹ் எனக்கு வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
உமர் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற உடல்களுடன் எப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் கூறுவதை அவர்களை விட நீங்கள் அதிகமாகச் செவியேற்பவர்கள் அல்லர். ஆயினும், அவர்களால் எனக்கு எந்தப் பதிலும் அளிக்க முடியாது" என்று கூறினார்கள்.