أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلاَّمٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَنْبَأَنَا الأَسْوَدُ بْنُ شَيْبَانَ، عَنْ أَبِي نَوْفَلِ بْنِ أَبِي عَقْرَبٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّوْمِ فَقَالَ " صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ " . وَاسْتَزَادَهُ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَجِدُنِي قَوِيًّا فَزَادَهُ قَالَ " صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ " . فَقَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُنِي قَوِيًّا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي أَجِدُنِي قَوِيًّا إِنِّي أَجِدُنِي قَوِيًّا " . فَمَا كَادَ أَنْ يَزِيدَهُ فَلَمَّا أَلَحَّ عَلَيْهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ " .
அபூ நவ்ஃபல் இப்னு அபீ அக்ரப் (ரஹ்) அவர்கள், தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
அவர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் நோன்பு நோற்பீராக" என்றார்கள். அவர் மேலும் (அனுமதி) கேட்டு, "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்; நான் (நோன்பு நோற்க) நல்ல திடகாத்திரமாக இருக்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக" என்று (அதிகப்படுத்தி) கூறினார்கள்.
அவர், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்; அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேன்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேன், நான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேன்" என்று (அவர் கூறியதையே) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (நாட்களை) அதிகப்படுத்திக் கொடுக்க முற்படவில்லை. ஆயினும் அவர் வற்புறுத்தவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக" என்று கூறினார்கள்.