இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1581சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ إِسْحَاقَ الْمَكِّيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ الْجُمَحِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ ثَفِنَةَ الْيَشْكُرِيِّ، - قَالَ الْحَسَنُ رَوْحٌ يَقُولُ مُسْلِمُ بْنُ شُعْبَةَ - قَالَ اسْتَعْمَلَ نَافِعُ بْنُ عَلْقَمَةَ أَبِي عَلَى عِرَافَةِ قَوْمِهِ فَأَمَرَهُ أَنْ يُصَدِّقَهُمْ قَالَ فَبَعَثَنِي أَبِي فِي طَائِفَةٍ مِنْهُمْ فَأَتَيْتُ شَيْخًا كَبِيرًا يُقَالُ لَهُ سَعْرُ بْنُ دَيْسَمٍ فَقُلْتُ إِنَّ أَبِي بَعَثَنِي إِلَيْكَ - يَعْنِي لأُصَدِّقَكَ - قَالَ ابْنَ أَخِي وَأَىَّ نَحْوٍ تَأْخُذُونَ قُلْتُ نَخْتَارُ حَتَّى إِنَّا نَتَبَيَّنُ ضُرُوعَ الْغَنَمِ ‏.‏ قَالَ ابْنَ أَخِي فَإِنِّي أُحَدِّثُكَ أَنِّي كُنْتُ فِي شِعْبٍ مِنْ هَذِهِ الشِّعَابِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَنَمٍ لِي فَجَاءَنِي رَجُلاَنِ عَلَى بَعِيرٍ فَقَالاَ لِي إِنَّا رَسُولاَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ ‏.‏ فَقُلْتُ مَا عَلَىَّ فِيهَا فَقَالاَ شَاةٌ ‏.‏ فَأَعْمِدُ إِلَى شَاةٍ قَدْ عَرَفْتُ مَكَانَهَا مُمْتَلِئَةً مَحْضًا وَشَحْمًا فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا ‏.‏ فَقَالاَ هَذِهِ شَاةُ الشَّافِعِ وَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَأْخُذَ شَافِعًا ‏.‏ قُلْتُ فَأَىَّ شَىْءٍ تَأْخُذَانِ قَالاَ عَنَاقًا جَذَعَةً أَوْ ثَنِيَّةً ‏.‏ قَالَ فَأَعْمِدُ إِلَى عَنَاقٍ مُعْتَاطٍ ‏.‏ وَالْمُعْتَاطُ الَّتِي لَمْ تَلِدْ وَلَدًا وَقَدْ حَانَ وِلاَدُهَا فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا فَقَالاَ نَاوِلْنَاهَا ‏.‏ فَجَعَلاَهَا مَعَهُمَا عَلَى بَعِيرِهِمَا ثُمَّ انْطَلَقَا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبُو عَاصِمٍ عَنْ زَكَرِيَّاءَ قَالَ أَيْضًا مُسْلِمُ بْنُ شُعْبَةَ ‏.‏ كَمَا قَالَ رَوْحٌ ‏.‏
முஸ்லிம் இப்னு ஷுஃபா கூறினார்கள்:
நாஃபி இப்னு அல்கமா அவர்கள் என் தந்தையைத் தமது கோத்திரத்திற்குப் பொறுப்பாளராக நியமித்து, அவர்களிடமிருந்து ஸதகா (ஸகாத்) வசூலிக்குமாறு ஏவினார்கள். என் தந்தை என்னை அவர்களில் ஒரு குழுவிடம் அனுப்பினார்கள்; நான் ஸஃர் இப்னு திஸாம் என்று அழைக்கப்படும் ஒரு முதியவரிடம் சென்றேன்.

நான் கூறினேன்: "என் தந்தை என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்கள் - அதாவது உங்களிடமிருந்து ஸகாத் வசூலிப்பதற்காக."

அவர் கேட்டார்கள்: "என் சகோதரரின் மகனே, எவ்வகையானவற்றை நீங்கள் எடுக்கிறீர்கள்?"

நான் கூறினேன்: "நாங்கள் (சிறந்ததைத்) தேர்ந்தெடுக்கிறோம்; ஆடுகளின் மடியைக்கூட நாங்கள் பரிசோதிப்போம்."

அவர் கூறினார்கள்: "என் சகோதரரின் மகனே, நான் உமக்கு ஒரு செய்தியை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான் இங்கிருக்கும் கணவாய்களில் ஒன்றில் எனது ஆடுகளுடன் இருந்தேன். அப்போது ஒட்டகத்தின் மீது இருவர் என்னிடம் வந்தனர். அவர்கள் என்னிடம், 'நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள்; உமது ஆடுகளுக்கான ஸதகாவை நீர் நிறைவேற்றுவதற்காக உம்மிடம் அனுப்பப்பட்டுள்ளோம்' என்றனர்.

நான், 'அதில் என் மீது என்ன கடமை உள்ளது?' என்று கேட்டேன். அவர்கள் 'ஓர் ஆடு' என்றனர்.

நான், பாலும் கொழுப்பும் நிறைந்ததாக நான் அறிந்திருந்த ஓர் ஆட்டைத் தேடிச்சென்று, அதை அவர்களிடத்தில் கொண்டுவந்தேன்.

அவர்கள், 'இது ஷாஃபி (வயிற்றில் குட்டியுள்ள அல்லது குட்டியுடன் உள்ள ஆடு). ஷாஃபியை (ஸகாத்தாக) எடுப்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்துள்ளார்கள்' என்றனர்.

நான், 'அப்படியென்றால் எதை எடுப்பீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஜத்ஆ (ஒரு வயதுடைய இளம் வெள்ளாடு) அல்லது ஸனிய்யா (இரண்டு வயதுடைய வெள்ளாடு)' என்று பதிலளித்தார்கள்.

பிறகு நான் 'முஃதாத்' ரக வெள்ளாட்டைத் தேடிச்சென்றேன். ('முஃதாத்' என்பது குட்டி ஈனாத, ஆனால் குட்டி ஈனும் பருவம் நெருங்கிய வெள்ளாடாகும்). அதை அவர்களிடம் கொண்டுவந்தேன்.

அவர்கள், 'இதை எங்களிடம் தாரும்' என்றனர். அவர்கள் அதைத் தங்களுடன் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்."

அபூ தாவூத் கூறினார்கள்: அபூ ஆஸிம் இந்த ஹதீஸை ஸக்கரிய்யாவிடமிருந்து அறிவித்தார்கள். ரவ்ஹ் கூறியதைப் போலவே, முஸ்லிம் இப்னு ஷுஃபா என்று அவரும் கூறினார்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்-அல்பானீ)
ضعيف (الألباني)