அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் (ஸகாத்துல் ஃபித்ர் ஆக) ஒரு ஸாஃ பேரீச்சம்பழம், அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமை, அல்லது ஒரு ஸாஃ உலர் திராட்சை, அல்லது ஒரு ஸாஃ மாவு, அல்லது ஒரு ஸாஃ பாலாடைக்கட்டி, அல்லது ஒரு ஸாஃ (ஒரு வகை) வாற்கோதுமை (அல்லது கோதுமை) ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை."
பிறகு (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அவர்கள் சந்தேகம் கொண்டு, "(அது) மாவு அல்லது (ஒரு வகை) வாற்கோதுமை (அல்லது கோதுமை)" என்று கூறினார்கள்.