அப்துல்லாஹ் இப்னு ஹப்ஷீ அல்-கத்அமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(தொழுகையில்) நீண்ட நேரம் நிற்பது" என்று பதிலளித்தார்கள்.
"தர்மங்களில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "குறைந்த வசதியுடையவர் (சிரமப்பட்டு) அளிக்கும் தர்மம்" என்று பதிலளித்தார்கள்.
"ஹிஜ்ரத் (துறத்தல்) செய்வதில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ் தனக்குத் தடுத்தவற்றைத் துறந்துவிடுவது" என்று பதிலளித்தார்கள்.
"ஜிஹாதில் (அறப்போரில்) சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இணைவைப்பாளர்களுக்கு எதிராகத் தன் செல்வத்தாலும், தன் உயிராலும் போரிடுவது" என்று பதிலளித்தார்கள்.
"கொல்லப்படுதலில் (வீர மரணத்தில்) கண்ணியமிக்கது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அல்லாஹ்வின் பாதையில்) எவருடைய இரத்தம் சிந்தப்பட்டு, அவருடைய குதிரையும் வெட்டப்படுகிறதோ அவரே" என்று பதிலளித்தார்கள்.