இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2591ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَنْفِقِي وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அஸ்மாவே!) செலவிடுங்கள்; (செலவழிப்பதில்) கணக்குப் பார்க்காதீர்கள். (நீங்கள் கணக்கிட்டால்) அல்லாஹ்வும் உங்களுக்குக் கணக்கிட்டு (குறைவாகவே) தருவான். (பொருளைப்) பதுக்கி வைக்காதீர்கள். (நீங்கள் பதுக்கினால்) அல்லாஹ்வும் உங்களிடமிருந்து (தன் அருளைத்) தடுத்துவிடுவான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح