حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ .
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீர் (பொருட்களை) சேர்த்து வைக்காதீர் (அதாவது, பையில் அடைத்து வைத்துக்கொள்ளாதீர்); அவ்வாறாயின் அல்லாஹ்வும் உமக்கு (தன் அருட்கொடைகளைத்) தடுத்துவிடுவான். உம்மால் இயன்றதை (தர்மமாக) அளியுங்கள்.'
அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளான அஸ்மா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்கு (வீட்டுச் செலவுகளுக்காக) கொண்டு வந்து கொடுப்பதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அவர் எனக்குக் கொண்டு வந்து கொடுப்பதிலிருந்து நான் (பிறருக்கு) வழங்கினால் என்மீது குற்றம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னால் இயன்றதை நீ வழங்கு; (உன் செல்வத்தை) முடிந்து வைத்துவிடாதே! (அப்படிச் செய்தால்,) அல்லாஹ்வும் உனக்கு (வழங்குவதை) முடிந்து விடுவான்" என்று கூறினார்கள்.