حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் நிலையில் நுழைவதற்கு முன்பும், மற்றும் (முடிவாக) (புனித) இல்லத்தை அவர்கள் தவாஃப் செய்வதற்கு முன்பும், நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணியும்போது அவர்களின் இஹ்ராமுக்காகவும், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்னர், (கஅபா) ஆலயத்தை தவாஃப் செய்வதற்கு முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.''
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பு அவர்களின் இஹ்ராமுக்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அதற்காகவும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.''