حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ، فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ اقْتُلُوهُ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தலையில் அரேபிய தலைக்கவசம் அணிந்தவாறு மக்காவிற்குள் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை கழற்றியபோது, ஒருவர் வந்து, “இப்னு கத்தல் கஃபாவின் திரையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் (கஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளார்)” என்று கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவனைக் கொல்லுங்கள்” என்று கூறினார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி ஆண்டில் தங்கள் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் மக்காவிற்குள் பிரவேசித்தார்கள்; அதை அவர்கள் கழற்றியபோது, ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, "இப்னு கத்தல் கஃபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறான்" என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனைக் கொல்லுங்கள்" என்று கூறினார்கள். மாலிக் (அறிவிப்பாளர்களில் ஒருவர்) அவர்கள், இந்தக் கூற்று கூறப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.