இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3525ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ ‏{‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏}‏ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي ‏ ‏ يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ لِبُطُونِ قُرَيْشٍ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

'(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்.' (26:214) எனும் இறைவசனம் வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் (அரபுக் குலத்தாரை) "யா பனீ ஃபிஹ்ர், யா பனீ அதீ" என குறைஷிகளின் பல்வேறு கிளைக் கோத்திரங்களை முதலில் குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4973ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ ‏{‏تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ‏}‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூலஹப் கூறினான், "நீ நாசமாகப் போ! இதற்காகவா எங்களை ஒன்று திரட்டினாய்?" எனவே, 'அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்' என வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح