இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தமது ஒட்டகத்தின் மீது (அமர்ந்திருந்தவாறு) கஃபாவை வலம் வந்து, (ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பெற்ற) மூலையை ஒரு கைத்தடியால் தொட்டார்கள்.
حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى الْقَنْطَرِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ حَوْلَ الْكَعْبَةِ عَلَى بَعِيرِهِ يَسْتَلِمُ الرُّكْنَ كَرَاهِيَةَ أَنْ يُضْرَبَ عَنْهُ النَّاسُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது தங்களுடைய ஒட்டகத்தின் மீது (அமர்ந்தவாறு) கஃபாவை தவாஃப் செய்தார்கள்; மேலும் (அதன்) மூலையைத் தொட்டார்கள். மேலும், மக்கள் தங்களை விட்டும் தள்ளப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். வளைந்த நுனியுடைய கைத்தடியால் ருக்ன் 1 ஐத் தொட்டார்கள்.