"என் ஒட்டகம் தொலைந்துவிட்டது. ஆகவே, அரஃபா நாளன்று அதைத் தேடி நான் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நான் (எனக்குள்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவராயிற்றே! இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று கூறினேன்."
ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் (தொலைந்துபோன) எனது ஒட்டகத்தை 'அரஃபா நாளில் தேடிச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் 'அரஃபா'வில் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.
உடனே நான், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவராயிற்றே! இங்கு இவருக்கு என்ன வேலை?” என்று கூறினேன்.
ஏனெனில், குறைஷிகள் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.