ஜுபைர் பின் முத்யிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
'என் ஒட்டகம் தொலைந்துவிட்டது. ஆகவே, அரஃபா நாளன்று அதைத் தேடி நான் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நான் (எனக்குள்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் 'ஹும்ஸ்' (மக்காவாசிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினர், அரஃபாவில் நிற்காமல் முஸ்தலிஃபாவில் நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்) கூட்டத்தைச் சேர்ந்தவராயிற்றே! இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று கூறினேன்.'
ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்துவிட்டேன். அதைத் தேடி அரஃபா தினத்தில் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் அரஃபாவில் நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். (அப்போது) நான், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆயிற்றே! இங்கு இவருக்கு என்ன வேலை?' என்று கூறினேன். (ஏனெனில்,) குறைஷிகள் 'ஹும்ஸ்' கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.