அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார்கள்:
அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் ரழி) அவர்களிடம், 'மக்கள் அகபாவின் (உயர்ந்த) மேற்பகுதியிலிருந்து ஜம்ராவின் மீது கற்களை எறிகிறார்கள்' என்று கூறப்பட்டது. உடனே அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியிலிருந்து (அதாவது, ஜம்ராவின் முன்புறத்திலிருந்து) அதன் மீது கற்களை எறிந்தார்கள். பிறகு, 'எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! சூரத்துல் பகரா எவர் மீது அருளப்பட்டதோ அவர் (முஹம்மது நபி ஸல்) இங்கிருந்துதான் (அதாவது, இந்த இடத்திலிருந்துதான்) எறிந்தார்கள்' என்று கூறினார்கள்.