அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம், "மக்கள் 'அகபா'வின் மேற்புறத்திலிருந்து ஜம்ராவின் மீது கற்களை எறிகிறார்கள்" என்று கூறப்பட்டது. உடனே அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியிலிருந்து அதன் மீது கற்களை எறிந்தார்கள். பிறகு, "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! சூரத்துல் பகரா எவர் மீது அருளப்பட்டதோ அவர் (ஸல்) அவர்கள் இங்கிருந்துதான் அதன் மீது கற்களை எறிந்தார்கள்" என்று கூறினார்கள்.