அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அபூ ஸயீதே! எவர் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகி விடுகிறது."
இதைக் கேட்டு அபூ ஸயீத் (ரழி) அவர்கள் வியப்படைந்து, "அல்லாஹ்வின் தூதரே, எனக்காக அதை மீண்டும் கூறுங்கள்" என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்துவிட்டுப் பிறகு கூறினார்கள்: "(இன்னும்) மற்றொன்று உள்ளது; அதன் மூலம் அடியார் சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுகிறார். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டதைப் போன்றதாகும்."
"அல்லாஹ்வின் தூதரே! அது என்ன?" என்று அவர் கேட்டார்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது!" என்று பதிலளித்தார்கள்.