இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4046ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ ‏ ‏ فِي الْجَنَّةِ ‏ ‏ فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உஹத் போரின் நாளில் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "நான் (இப்போரில்) கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன் என்று கூறுங்கள்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில்" என்று பதிலளித்தார்கள். உடனே அவர் தன் கையில் இருந்த பேரீச்சம்பழங்களை எறிந்துவிட்டு, கொல்லப்படும் வரை போரிட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1899ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لِسَعِيدٍ - أَخْبَرَنَا
سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ قَالَ رَجُلٌ أَيْنَ أَنَا يَا، رَسُولَ اللَّهِ إِنْ قُتِلْتُ قَالَ ‏ ‏
فِي الْجَنَّةِ ‏ ‏ ‏.‏ فَأَلْقَى تَمَرَاتٍ كُنَّ فِي يَدِهِ ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ ‏.‏ وَفِي حَدِيثِ سُوَيْدٍ قَالَ رَجُلٌ
لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில்" என்று கூறினார்கள்.
உடனே அவர் தம் கையில் இருந்த பேரீச்சம்பழங்களை எறிந்துவிட்டு, தாம் கொல்லப்படும் வரை போரிட்டார்.

சுவைத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "உஹதுப் போர் நாளன்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்" என்று இடம்பெற்றுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح