அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் தனக்கு நன்மை இருக்கப்பெற்று மரணித்த எவரும், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த்தியாகியைத் தவிர! நிச்சயமாக அவர், உயிர்த்தியாகத்தின் சிறப்பைக் காண்பதால், திரும்பி வந்து இவ்வுலகில் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்."