இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவர் மற்றவரின் வியாபாரத்தின் மீது (அதாவது, ஒரு விற்பனை உறுதி செய்யப்பட்டு, வாங்குபவர் மற்றும் விற்பவர் சம்மதித்த பின் அதை முறியடிக்கும் விதமாக) வியாபாரம் செய்ய வேண்டாம். மேலும், உங்களில் ஒருவர் மற்றவரின் பெண் பேசுதலின் மீது (அதாவது, ஒரு பெண்ணுக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடந்து, இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து, நிச்சயதார்த்தம் உறுதியான பின்) பெண் பேச வேண்டாம்."