இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5317ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رِفَاعَةَ، الْقُرَظِيَّ تَزَوَّجَ امْرَأَةً، ثُمَّ طَلَّقَهَا فَتَزَوَّجَتْ آخَرَ فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ لَهُ أَنَّهُ لاَ يَأْتِيهَا، وَإِنَّهُ لَيْسَ مَعَهُ إِلاَّ مِثْلُ هُدْبَةٍ فَقَالَ ‏ ‏ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ரிஃபாஆ அல்-குரழி அவர்கள் ஒரு பெண்ணை மணந்து, பின்னர் அவளை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். பிறகு அப்பெண் வேறொருவரை மணந்துகொண்டார். அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர் தம்மிடம் (தாம்பத்தியத்திற்கு) வருவதில்லை என்றும், அவரிடம் ஆடையின் ஓரத்தைப் போன்றதைத் தவிர வேறெதுவும் இல்லை என்றும் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; நீ அவருடைய (இன்பத்) தேனைச் சுவைக்கும் வரையிலும், அவர் உன்னுடைய (இன்பத்) தேனைச் சுவைக்கும் வரையிலும் (முதல் கணவரிடம் திரும்ப முடியாது)” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح