இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5314ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لاَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ رَجُلٍ وَامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، وَفَرَّقَ بَيْنَهُمَا‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே 'லியான்' செய்ய வைத்தார்கள்; மேலும் அவ்விருவரையும் பிரித்து வைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5315ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لاَعَنَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَتِهِ، فَانْتَفَى مِنْ وَلَدِهَا فَفَرَّقَ بَيْنَهُمَا، وَأَلْحَقَ الْوَلَدَ بِالْمَرْأَةِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் 'லிஆன்' செய்ய வைத்தார்கள், மேலும் அந்தக் கணவர் அப்பெண்ணின் குழந்தையைத் தன்னுடையது அல்ல என்று மறுத்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (விவாகரத்து மூலம்) பிரித்து வைத்து, அக்குழந்தை தாய்க்கு மட்டுமே உரியது எனத் தீர்ப்பளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6748ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَجُلاً، لاَعَنَ امْرَأَتَهُ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَانْتَفَى مِنْ وَلَدِهَا فَفَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا، وَأَلْحَقَ الْوَلَدَ بِالْمَرْأَةِ‏.‏
இப்னு உமர் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தம் மனைவியுடன் ‘லிஆன்’ செய்தார். மேலும் அவர், அவளுக்குப் பிறந்த குழந்தையை(த் தம் குழந்தை அன்று என) மறுத்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரித்துவிட்டு, அந்தக் குழந்தையை அப்பெண்ணுடன் சேர்த்துவிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1494 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى، بْنُ يَحْيَى - وَاللَّفْظُ لَهُ - قَالَ قُلْتُ لِمَالِكٍ حَدَّثَكَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، لاَعَنَ امْرَأَتَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَفَرَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُمَا وَأَلْحَقَ الْوَلَدَ بِأُمِّهِ قَالَ نَعَمْ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தம் மனைவியின் மீது சாபப் பிரமாணம் (லிஆன்) செய்தார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்தினார்கள்; மேலும், அந்தக் குழந்தையை அதன் தாயுடன் இணைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1494 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لاَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَامْرَأَتِهِ وَفَرَّقَ بَيْنَهُمَا ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்சார்களில் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே சாபப் பிரமாணம் (லிஆன்) செய்வித்து, அவ்விருவரையும் பிரித்து வைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1682சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ مَنْ صَلَّى مِنَ اللَّيْلِ فَلْيَجْعَلْ آخِرَ صَلاَتِهِ وَتْرًا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِذَلِكَ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"இரவில் தொழுபவர், தனது இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக்கொள்ளட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிடுவார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)