حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ، وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ بِنْتُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا، وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَىْءٌ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அபூபக்கர் (ரழி) அவர்கள், ஜகாத்தாக ஒரு பின்த் மகாத் (அதாவது, ஒரு வயது பெண் ஒட்டகம்) கொடுக்க வேண்டிய ஒருவர், தம்மிடம் அது இல்லாத நிலையில், பின்த் லபூன் (இரண்டு வயது பெண் ஒட்டகம்) வைத்திருந்தால், (அது சம்பந்தமாக) அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்யும்படி என்ன கட்டளையிட்டிருந்தானோ அதை எனக்கு எழுதினார்கள். (அவர்கள் எழுதியதாவது) அது அவரிடமிருந்து ஜகாத்தாக ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் ஜகாத் வசூலிப்பவர் அவருக்கு 20 திர்ஹம்கள் அல்லது இரண்டு ஆடுகளைத் திருப்பிக் கொடுப்பார்; மேலும், ஜகாத் கொடுப்பவரிடம் பின்த் மகாத் இல்லாமல், அவரிடம் இப்னு லபூன் (இரண்டு வயது ஆண் ஒட்டகம்) இருந்தால், அது அவருடைய ஜகாத்தாக ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் அவருக்கு எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.