அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அம்பெய்தல், ஒட்டகப் பந்தயம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றைத் தவிர வேறு (போட்டிகளுக்காகப்) பந்தயப் பரிசுகள் கிடையாது."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒட்டகங்கள் அல்லது குதிரைகள் (சம்பந்தப்பட்ட பந்தயங்கள்) தவிர வேறு எதற்கும் வெகுமதிகள் கிடையாது."
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعِ بْنِ أَبِي نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ سَبْقَ إِلاَّ فِي خُفٍّ أَوْ فِي حَافِرٍ أَوْ نَصْلٍ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகப் பந்தயம், அல்லது குதிரைப் பந்தயம் அல்லது அம்பு எய்தல் ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் பந்தயம் கூடாது.
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - { أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -كَانَ إِذَا أَرَادَ غَزْوَةً وَرَّى بِغَيْرِهَا } مُتَّفَقٌ عَلَيْهِ [1] .
கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்குப் புறப்பட நாடும் போதெல்லாம், வேறு ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போன்று பாசாங்கு செய்வார்கள்.