இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1627 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهْوَ ابْنُ الْحَارِثِ - عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ ثَلاَثَ لَيَالٍ إِلاَّ وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ ‏ ‏ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مَا مَرَّتْ عَلَىَّ لَيْلَةٌ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ إِلاَّ وَعِنْدِي وَصِيَّتِي ‏.‏
சலீம் அவர்கள், தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர் (ரழி)) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:

மரண சாசனம் செய்ய ஏதேனும் பொருள் உடைய ஒரு முஸ்லிம், அது சம்பந்தமாக தனது மரண சாசனத்தைத் தம்முடன் எழுதி வைத்திருக்காமல் மூன்று இரவுகள்கூட கழிப்பது முறையல்ல.

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதை நான் செவியுற்ற நாளிலிருந்து, எனது மரண சாசனம் என்னுடன் (எழுதப்பட்டு) இல்லாமல் நான் ஒரு இரவைக் கூடக் கழிக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح