இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1623 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَتَى بِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا ‏.‏ فَقَالَ ‏"‏ أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَارْدُدْهُ ‏"‏ ‏.‏
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தந்தை என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, “நான் என் இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக (கொடையாக) வழங்கியுள்ளேன்” என்று கூறினார்.
அதற்கு அவர்கள் (நபியவர்கள்), “உமது அனைத்துப் பிள்ளைகளுக்கும் (இதுபோன்ற) அன்பளிப்பை வழங்கியுள்ளீரா?” என்று கேட்டார்கள்.
அவர், “இல்லை” என்றார்.
அதற்கு அவர்கள், “அப்படியானால், அதை (அந்த அன்பளிப்பை) திரும்பப் பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح