இப்னு உமர் (ரழி) அவர்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "வைகறை (ஃபஜ்ர்) புலர்ந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்களைத் தவிர (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையைத் தவிர வேறு எந்த உபரித் தொழுகையையும்) தொழ மாட்டார்கள்."