அபூ உமாமா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'தங்களிடமிருந்து நான் (கற்றுக்கொண்டு) கடைப்பிடிக்கக்கூடிய ஒரு காரியத்தை எனக்குக் கட்டளையிடுங்கள்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நோன்பைக் கடைப்பிடிப்பீராக! ஏனெனில் அதற்கு நிகரானது எதுவும் இல்லை' என்று கூறினார்கள்."
அபூ உமாமா அல்-பாஹிலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு காரியத்தை எனக்குக் கட்டளையிடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீர் நோன்பைக் கடைப்பிடிப்பீராக! ஏனெனில் அதற்கு நிகரான ஒன்று எதுவும் இல்லை' என்று கூறினார்கள்."
அபூ உமாமா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக அறிவித்தார்கள்: "எந்த அமல் சிறந்தது?" அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நீர் நோன்பைப் பற்றிக்கொள்வீராக, ஏனெனில், அதற்கு சமமானது எதுவும் இல்லை."