இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2874சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ أُمَيْمَةَ بِنْتَ رُقَيْقَةَ، تَقُولُ جِئْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نِسْوَةٍ نُبَايِعُهُ فَقَالَ لَنَا ‏ ‏ فِيمَا اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ إِنِّي لاَ أُصَافِحُ النِّسَاءَ ‏ ‏ ‏.‏
உமைமா பின்த் ருகைகா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் வேறு சில பெண்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்வதற்காகச் சென்றேன். அவர் எங்களிடம், ‘உங்களால் இயன்றவற்றிலும், உங்கள் சக்திக்குட்பட்டவற்றிலும் (உள்ள நிபந்தனைகளின் மீது நான் பைஅத்தை ஏற்றுக்கொள்கிறேன்). நிச்சயமாக நான் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)