حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلاً، فَأَوْقَدَ نَارًا وَقَالَ ادْخُلُوهَا. فَأَرَادُوا أَنْ يَدْخُلُوهَا، وَقَالَ آخَرُونَ إِنَّمَا فَرَرْنَا مِنْهَا، فَذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا " لَوْ دَخَلُوهَا لَمْ يَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ". وَقَالَ لِلآخَرِينَ " لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ".
அலீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பி, ஒருவரை அவர்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள். அவர் ஒரு நெருப்பை மூட்டி, “அதற்குள் நுழையுங்கள்” என்று கூறினார். அவர்களில் சிலர் அதற்குள் நுழைய விரும்பினார்கள்; வேறு சிலரோ, “நாங்கள் நெருப்பிலிருந்துதானே (நரக நெருப்பிலிருந்து) தப்பி ஓடி வந்துள்ளோம்” என்று கூறினார்கள். அவர்கள் (இச்சம்பவத்தை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். (நெருப்பில்) நுழைய விரும்பியவர்களிடம் அவர்கள், “அவர்கள் அதற்குள் நுழைந்திருந்தால், கியாமத் நாள் வரை அதிலேயே (நரகத்தில்) இருந்திருப்பார்கள்” என்று கூறினார்கள். மற்றவர்களிடம், “அல்லாஹ்வுக்குப் பாவம் செய்யும் காரியத்தில் (எவருக்கும்) கீழ்ப்படிதல் இல்லை; கீழ்ப்படிதல் என்பது நன்மையான காரியத்தில் மட்டுமே உண்டு” என்று கூறினார்கள்.
அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பி, அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக நியமித்தார்கள். அவர் (அந்தத் தளபதி) ஒரு நெருப்பை மூட்டி, "இதனுள் நுழையுங்கள்" என்று கூறினார். (படையினரில்) சிலர் அதில் நுழைய முற்பட்டனர். ஆனால் மற்றவர்கள், "நாங்கள் நெருப்பிலிருந்துதானே தப்பி ஓடி வந்துள்ளோம்" என்று கூறினர்.
இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதில் நுழைய முற்பட்டவர்களிடம், "நீங்கள் அதில் நுழைந்திருந்தால் மறுமை நாள்வரை நீங்கள் அதிலேயே இருந்திருப்பீர்கள்" என்று கூறினார்கள். மற்றவர்களிடம் (அவர்களின் சரியான நிலைப்பாட்டைப் பாராட்டி) நல்ல விதமாகப் பேசினார்கள். மேலும், "அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் (எவருக்கும்) கட்டுப்படுதல் இல்லை; கட்டுப்படுதல் என்பது நன்மையானவற்றில் மட்டுமே" என்று கூறினார்கள்.