அப்துர்ரஹ்மான் பின் ஆபிஸ் அவர்கள் தனது தந்தை கூறியதாக அறிவித்தார்கள்:
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் குர்பானிப் பிராணிகளின் இறைச்சி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக குர்பானிப் பிராணிகளின் கால் சதைப்பகுதிகளை (கால் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதிகள்) ஒரு மாத காலத்திற்கு சேமித்து வைப்பதுண்டு, பின்னர் அவர்கள் அவற்றை உண்பார்கள்' என்று கூறினார்கள்."