அதிய்யிப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) கேட்டேன்: 'நான் எனது நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறேன். (வேட்டையாடிய பிறகு) எனது நாயுடன் வேறு ஒரு நாயையும் காண்கிறேன். அவையிரண்டில் எது (வேட்டைப் பிராணியைப்) பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை.' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயின் மீதுதான் (வேட்டைக்கு அனுப்பும்போது) அல்லாஹ்வின் பெயரைக் கூறினீர்கள்; மற்றொன்றின் மீது கூறவில்லை.'