حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ضَحِّ بِهِ أَنْتَ .
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் அறுத்துப் பலியிடுவதற்காக அவர்களிடையே பங்கிடுவதற்கு என சில ஆடுகளை உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தபோது, ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை உமது சார்பாக நீர் அறுத்துப் பலியிடுவீராக” என்று உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ضَحِّ أَنْتَ بِهِ .
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், (`ஈத்-அல்-அள்ஹா`வில்) குர்பானிக்காக அறுப்பதற்கு தமது தோழர்களிடையே பங்கிட்டுக் கொடுப்பதற்காக அவருக்கு சில ஆடுகளைக் கொடுத்தார்கள். ஒரு ஆட்டுக்குட்டி எஞ்சியிருந்தது. அதை அவர் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "(உமது சார்பாக) அதைக் குர்பானி கொடுப்பீராக" என்று கூறினார்கள்.
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ
يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فَقَالَ ضَحِّ بِهِ أَنْتَ . قَالَ قُتَيْبَةُ عَلَى صَحَابَتِهِ .
உக்பา பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தோழர்களுக்கு (ரழி) மத்தியில் விநியோகிப்பதற்காக ஆடுகளை அன்பளிப்புகளாகக் கொடுத்தார்கள். அவர்கள் (ரழி) அவற்றை அறுத்துப் பலியிட்டார்கள்; ஆனால், ஓர் ஆண்டு வயதுடைய ஆட்டுக்குட்டி ஒன்று மீதமிருந்தது. (ஒருவர்) அதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அப்போது, அவர்கள் (ஸல்) கூறினார்கள்: