حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "(விற்பனையாளர் செய்யும்) சத்தியம், வாங்குபவரை பொருளை வாங்கத் தூண்டலாம்; ஆனால் அது அல்லாஹ்வின் பரக்கத்தை இழந்துவிடும்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரொருவர் ஒரு மரத்தை ஒட்டுக்கட்டி, பிறகு அதன் வேர்களை விற்கிறாரோ, வாங்குபவர் ஒரு நிபந்தனையை விதித்தாலன்றி, அம்மரத்தின் பழம் அதனை ஒட்டுக்கட்டியவருக்கே உரியதாகும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாகக் கூறினார்கள்:
சத்தியம் செய்வது ஒரு பொருளுக்கு விரைவான விற்பனையை ஏற்படுத்துகிறது, ஆனால் அது பரக்கத்தை அழித்துவிடுகிறது.