அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ளுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகவும், துல்-ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள். பிறகு அவர்கள், காலைப் பொழுது விடியும் வரை துல்-ஹுலைஃபாவில் இரவைக் கழித்தார்கள். அவர்கள் தமது வாகனத்தில் ஏறி அது நிலைபெற்று நின்றபோது, (ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து) தல்பியாவை உரக்கக் கூறினார்கள்.