ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஒரு மரத்தின் அல்லது நிலத்தின்) பல ஆண்டுகளின் (எதிர்கால) விளைச்சலை (முன்கூட்டியே) விற்பதைத் தடுத்தார்கள்.
இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில், "(ஒரு மரத்தின்) கனிகளைப் பல ஆண்டுகளுக்கு (முன்கூட்டியே) விற்பது" (என வந்துள்ளது).