இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6892ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ، فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ، لاَ دِيَةَ لَكَ ‏ ‏‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். கடியுண்டவர் தனது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் (கடித்தவரின்) இரண்டு முன் பற்கள் விழுந்துவிட்டன. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று உங்களில் ஒருவர் தம் சகோதரரைக் கடிக்கிறாரே! உனக்கு நஷ்டஈடு (தியா) எதுவும் கிடையாது” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1673 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَاتَلَ يَعْلَى ابْنُ مُنْيَةَ أَوِ ابْنُ أُمَيَّةَ رَجُلاً فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ فَنَزَعَ ثَنِيَّتَهُ - وَقَالَ ابْنُ الْمُثَنَّى ثَنِيَّتَيْهِ - فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ أَيَعَضُّ أَحَدُكُمْ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَهُ ‏ ‏ ‏.‏
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

யஃலா இப்னு முன்யா அல்லது இப்னு உமய்யா (ரழி) அவர்கள் ஒரு மனிதருடன் சண்டையிட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரின் கையைக் கடித்தார். அவர் தம் கையை மற்றவரின் வாயிலிருந்து உருவியெடுத்தபோது, (கடித்தவரின்) முன் பல் விழுந்துவிட்டது.

அவர்கள் தங்கள் வழக்கை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்கள், "ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று உங்களில் ஒருவர் கடிப்பாரா? அதற்குரிய நஷ்டஈடு ஏதுமில்லை" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح